வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் 3 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் அரிய வகை இன வெளிமான்கள்,புள்ளிமான்கள், மட்டக் குதிரைகள், காட்டுப்பன்றிகள்,நரி, குரங்கு உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஏராளமான எண்ணிக்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் நிகழாண்டுக்கான (2016-17) கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. கணக்கெடுப்பு தகவல் சில நாள்களில் வெளியிடப்படும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.