திருமருகல் அருகே 13 மின் மோட்டார்கள் பறிமுதல்

திருமருகல் அருகே 13 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.நாகை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம்

திருமருகல் அருகே 13 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் மற்றும் மின் மோட்டார்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 3 பிரிவுகளாக பேரூராட்சிக்குள்பட்ட 15 வார்டுகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை மீறி குடிநீர் குழாய்களில் மின்மோட்டார்களை பொருத்தி குடிநீர் உறிஞ்சியது தொடர்பாக 13 மின்மோட்டார்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வீடுகளின் வாசல்களில் குடிநீர் குழாய்கள் அமைத்துக் கொள்ளவும், பேரூராட்சியில் அனுமதிக்கப்பட்ட அளவு குடிநீர் குழாய்களை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com