மண் எடுக்க விண்ணப்பிப்பதற்கு இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நீர் நிலைகளிலிருந்து விலையில்லாமல் மண் எடுக்க விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்

மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நீர் நிலைகளிலிருந்து விலையில்லாமல் மண் எடுக்க விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் மே 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலை ஆதாரங்களில் அதிகளவில் தண்ணீரை சேமிக்கும் வகையில், நீர் நிலைகளை தூர்வார அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நீர்நிலை ஆதாரங்களிலிருந்து வண்டல் மண், சவுடு மண், களிமண் ஆகியவற்றை விவசாயம், மண்பாண்டத் தயாரிப்பு உள்ளிட்ட பொது பயன்பாடுகளுக்குப் பொதுமக்கள் விலையில்லாமல் வெட்டி எடுத்துக் கொள்ள, விண்ணப்பித்துப் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பயன் பெற விரும்பும், பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்காக கிராமம் வாரியாக வெவ்வேறு தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதன்படி, மே 19, மே 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த சிறப்பு முகாம்களில் தொடர்புடைய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 19- சிறப்பு முகாம்கள்... சங்கமங்கலம், செம்பியன்மாதேவி, திட்டச்சேரி, கோட்டூர், நரிமணம், அத்திப்புலியூர், தேவூர், பிரதாபராமபுரம், சின்னத்தும்பூர், செம்போடை, நாலுவேதபதி, கத்தரிப்புலம், ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி, எட்டுக்குடி, வலிவலம், நீர்முளை, மணக்குடி, பட்டவர்த்தி, மணல்மேடு, வேட்டங்குடி, பெருந்தோட்டம், கதிராமங்கலம், திருமயிலடி, முதலைமேடு, பொறையாறு, பெரம்பூர், தலையுடையவர்கோவில்பத்து, காளமநல்லூர், சேத்திராபாலபுரம், தத்தங்குடி, பாலையூர் ஆகிய பகுதிகளில் மே 19-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மே 20- சிறப்பு முகாம்கள்.... ஐவநல்லூர், அகரஒரத்தூர், கட்டுமாவடி, கிடாமங்கலம், கங்களாஞ்சேரி, குருமணாங்குடி, வெண்மணி, திருப்பூண்டி மேற்கு, கருங்கண்ணி, குரவப்புலம், காடந்தேத்தி, செட்டிப்புலம், வாய்மேடு கிழக்கு, தொழுதூர், கொளப்பாடு, பண்ணைத்தெரு, பட்டமங்கலம், வில்லியநல்லூர், கேசிங்கன், எடமணல், நாங்கூர், கருவாழக்கரை, திருச்சம்பள்ளி, மேலையூர், திருநாள்கொண்டச்சேரி, பழையக்கூடலூர் ஆகிய கிராமங்களில் மே 20-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com