நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு தொடங்கி தெற்கு திசையிலிருந்து வழக்கத்தைவிட வேகமான கடல் காற்று வீசி வருகிறது. காற்றில் அதிகளவில் மணல் துகள்கள் கலந்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கோடியக்கரை முதல் வேதாரண்யத்தின் தெற்கு பகுதி கடல் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பலத்த காற்றின் காரணமாக மரக்கிளைகள் மின்கம்பிகளில் உரசுவதால், அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால், சீரான மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.