சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கான குறைதீர் கூட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மே 30-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு முகவர்கள், நுகர்வோர் அமைப்பினரைக் கொண்டு நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில், எரிவாயு நுகர்வோர் பங்கேற்று, எரிவாயு நுகர்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீர்வுப் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.