டெங்கு விழிப்புணர்வு முகாம்

சீர்காழி  அருகேயுள்ள கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

சீர்காழி  அருகேயுள்ள கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
பள்ளியில், சுகாதாரத்துறை மற்றும் கிருஷ்ணா சமூக நலப் பேரவை சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார  மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சவுந்தர்ராஜன் பங்கேற்று மாணவ-மாணவியர்களுக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்கி, டெங்கு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். சுகாதார ஆய்வாளர் கருணாகரன், சமூக நலப் பேரவைத் தலைவர் ரமேஷ், சித்த மருத்துவர் மணிகண்டவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com