சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நவ.15-ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மின்வாரிய செயற் பொறியாளர் நக்கீரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீர்காழி கோட்ட அலுவலகத்தில் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சாமுவேல் ராஜசேகரன் தலைமையில் புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு மின்வாரிய நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், மாதானம், அரசூர், காளி, மணல்மேடு, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, தரங்கம்பாடி, ஆக்கூர், பூம்புகார், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், திருக்டையூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் மின்உபயோகிப்பாளர்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.