தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட கேசவன்பாளையம் கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.
கேசவன்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இளையராஜா மகன் லோகேஷ் (10). மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட லோகேஷ் கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை, திருவாரூர் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சேர்க்கப்பட்ட நிலையில் அன்று இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.