நாகப்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ.எஸ். மோகன் தலைமை வகித்தார். பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பாதிப்புகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.