மழை பாதிப்பு: நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  நிவாரணம்  வழங்கக் கோரி  மதிமுக  சார்பில்  ஆர்ப்பாட்டம்  திங்கள்கிழமை  நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் மழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  நிவாரணம்  வழங்கக் கோரி  மதிமுக  சார்பில்  ஆர்ப்பாட்டம்  திங்கள்கிழமை  நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஏ.எஸ். மோகன் தலைமை வகித்தார்.  பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். பாதிப்புகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com