நாகை மாவட்டம்,வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் பள்ளி வகுப்பறை கட்டடங்களை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காக கட்டப்பட்டு பழுதடைந்துள்ள கட்டடங்களை பருவ மழையைக் கருத்தில் கொண்டு அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பல்வேறு கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் 12 கட்டடங்கள் பழுதடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில்,வேதாரண்யம் மூன்றாம் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் உள்ள கட்டடம் இடித்து அகற்றும் பணி தொடங்கியுள்ளது.