இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

குத்தாலத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குத்தாலத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குத்தாலம் பேருந்து நிலையத்தில், குத்தாலம் ரோட்டரி சங்கம் மற்றும் நித்தியஸ்ரீ பாலாஜி மருத்துவ மையம் சார்பில் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற முகாமை, சங்க சாசனத் தலைவர் தணிகாசலம் தொடங்கி வைத்தார். மருத்துவர் பாலாஜி தலைமையில் முருகேசன், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் ரத்த பரிசோதனை செய்தனர். இதில் பயணிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் 286 பேர் பயன்பெற்றனர்.  முகாமில்,  செயலர் வேணுகோபால், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com