பண்டித ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா

பாரத முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128-வது பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாரத முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128-வது பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேருவின் பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் கே. செல்வம் தலைமையில், மயிலாடுதுறை டாக்டர் வரதாச்சாரியார் பூங்காவில் உள்ள நேருவின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மயூரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் 30 பேருக்கு கட்சி சார்பில் எழுதுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் பண்ணை டி. சொக்கலிங்கம்,  நாகை மாவட்டத் துணைத் தலைவர்கள் பி. ஜி. பத்மநாபன், கே. கமலநாதன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. கனகசபை, எஸ்.சி. அணி நாகை மாவட்டத் தலைவர் கோவி. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com