நாகை மாவட்டம், திருக்கடையூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருக்கடையூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாவையொட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப்போட்டி ஆகியன நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி முதல்வர் சிவானந்தம் பரிசுகள் வழங்கினார்.
கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் எம். குமார், உதவி மேலாளர் எம். மலர்விழி ஆகியோர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர். பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. பாலு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.