வடகிழக்குப் பருவ மழையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்ற பாஜக ஒன்றிய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வடகிழக்குப் பருவ மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் ஒன்றியத் தலைவர் பொன். சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியப் பொதுச் செயலர்கள் ஆர். தமிழ்வாணன், டி. சக்திவேல், நாகை வடக்கு மாவட்டத் தலைவர் ஜி. வெங்கடேசன், ஒன்றியத் துணைத் தலைவர் கே. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.