திருநாங்கூர் செம்பொன்செய் கோயில் சம்ப்ரோட்சணம் வியாழக்கிழமை (நவ.23)நடைபெறுகிறது.
சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூர் ஸ்ரீசெம்பொன்செய்கோயில் என்றழைக்கப்படும் அல்லிமாமலராள் சமேத பேரருளாளன் செம்பொன் அரங்கர் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயில் சம்ப்ரோட்சணம் செய்ய முடிவெடுத்து திருப்பணிகள் நிறைவடைந்தது.
வியாழக்கிழமை சம்ப்ரோட்சணம் 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடங்கள் கோயிலை வலம் வந்து சம்ப்ரோட்சணம் நடைபெறவுள்ளது.