டிராக்டர் மோதி தொழிலாளி சாவு

மயிலாடுதுறையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது  டிராக்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.

மயிலாடுதுறையில் புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மீது  டிராக்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
மயிலாடுதுறையை அடுத்துள்ள  கீழபட்டமங்கலத் தெருவைச் சேர்ந்தவர் க. கலியமூர்த்தி (50). கூலித்தொழிலாளி. இவர், மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில், கலியமூர்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவரது மகன் சரவணன் (32)  அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து, டிராக்டர் ஓட்டுநரான அகரகீரங்குடி உடையார் தெருவைச் சேர்ந்த   ரா. அரவிந்தை (30)  கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com