நாகை மாவட்டம், குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை ஆசிரியர் ஜி. பரமசிவம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சிவகுமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் கே. சுவாமிநாதன் வரவேற்றார்.
குத்தாலம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி செந்தில்குமார் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.
நிறைவில் தேசிய மாணவர் படை அலுவலர் பிரபு டேவிட் சாமுவேல் நன்றி கூறினார்.