மத்திய அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் சங்கரவடிவேல், இராமலிங்கம், அமிர்தராஜா, நெளசாத்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமித்ஷாவின் மகன் போலியான நிறுவனம் தொடங்கி, ரூ. 80 கோடிக்கு வருமானத்தை ஈட்டியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.