பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவைக் கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நாகை வடக்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜகுமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் அன்பழகன், ராஜா, ஞானசம்பந்தம், பாலு, பாலகுரு, செல்வமணி, உத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டியை (சரக்கு சேவை வரி) ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயலாளர் கோவி. செல்வராஜ், மாவட்ட செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. கனகசபை, நகரச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.