சீர்காழி அருகே முகநூலில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய இளைஞர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சீர்காழி அருகேயுள்ள திருவாலி நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). இவர், மங்கைமடம் பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சதீஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்தும், அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை சைபர்கிரைம் போலீஸார், திருவெண்காடு பகுதியில் இருந்த சதீஷ்குமாரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.