மயிலாடுதுறை டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில், மயிலாடுதுறை டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியில் தீபாவளி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
பள்ளி தலைமையாசிரியர் எஸ். மார்டின் தம்பையா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், மயிலாடுதுறை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஏ. நாகராஜன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சோம. அண்ணா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் கே. கலியமூர்த்தி ஆகியோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
காவல் ஆய்வாளர் ஜி. அழகேசன்,தொழிலதிபர் ஜெனிபர் எஸ். பவுல்ராஜ் ஆகியோர் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் இனிப்புகள் வழங்குகின்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டெல்டா ரோட்டரி சங்கத்தின் தலைவர் எம். முருகேசன், செயலர் எஸ். சங்கர் கணேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.டி. ஆனந்த், எம். கணேஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.