தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறையில் தீக்கிரையான வீடுகளின் குடும்பங்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள்

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறையில் தீக்கிரையான வீடுகளின் குடும்பங்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
ஆறுகாட்டுத்துறையில் பெரியவீரன் உள்பட 5 பேரின் கூரை வீடுகள் திங்கள்கிழமை தீக்கிரையானது. பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும் திமுக சார்பில் தலா ரூ. 4 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலாளர் (பொறுப்பு) கௌதமன், மீனவரணி செயலாளர் எஸ்.கே. சேகர், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மா. மீனாட்சிசுந்தரம், என்.வி. காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், வேதாரண்யம் வணிகர் சங்கம் சார்பில் உடைகள் மற்றும் உணவுப் பொருள்கள் அளிக்கப்பட்டன. சங்கத் தலைவர் திருமலை.செந்தில், செயலாளர் அய்யாத்துரை, பொருளாளர் லிங்கேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com