சீர்காழியில் சிட்டி யூனியன் வங்கி சார்பில், வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
சிட்டி யூனியன் வங்கி சீர்காழி கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிளை மேலாளர் வி. ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். உதவி மேலாளர் ஏ. உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். முகாமில் வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு கும்பகோணம் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் தலைமையில், மருத்துவ நிபுணர்கள் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்நீர் அழுத்த நோய் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினர். மேலும், கண் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.