மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பயின்றவர்கள் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இந்த ஆண்டு மற்றும் இதற்கு முந்தைய ஆண்டுகளில், இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை, முதுநிலை அறிவியல் பயின்ற மாணவ, மாணவியர் பட்டம் பெறுவதற்கு, அதற்குரிய கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி செப். 19 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அக். 7 -ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும். இதற்கான விண்ணப்பங்கள் கல்லூரி வேலை நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும், ஏவிசி மாலை நேரக் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் என அதில் தெரிவித்துள்ளார்.