ஏவிசி கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பயின்றவர்கள் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பயின்றவர்கள் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இந்த ஆண்டு மற்றும் இதற்கு முந்தைய ஆண்டுகளில், இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை, முதுநிலை அறிவியல் பயின்ற மாணவ, மாணவியர் பட்டம் பெறுவதற்கு, அதற்குரிய கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி செப். 19 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அக். 7 -ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாகும். இதற்கான விண்ணப்பங்கள் கல்லூரி வேலை நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும், ஏவிசி மாலை நேரக் கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com