சிட்டி யூனியன் வங்கி பவுண்டேசன் தலைவர் காவிரி புஷ்கரம் விழாவில் பங்கேற்பு

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் சிட்டி யூனியன் வங்கி பவுண்டேசன் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பங்கேற்று புனித நீராடினார்.

மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் சிட்டி யூனியன் வங்கி பவுண்டேசன் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பங்கேற்று புனித நீராடினார்.
பின்னர், மயிலாடுதுறை வள்ளலார் ஒத்தத் தெருவில் நடைபெற்ற மயிலாடுதுறை ஜதிலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி மற்றும் பாம்பே பெண்கள் குழுவினரின் செளந்தர்ய லஹரி பாராயணம், பித்துக்குளி முருகதாஸின் சீடர் பேராசிரியர் அனந்தராமனின் பக்திப்பாடல்கள் நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்.
அப்போது, இவ்விழாவுக்கு சிட்டி யூனியன் வங்கி சார்பில் நிதியுதவியளித்ததற்காக எஸ். பாலசுப்பிரமணியனுக்கு காவிரி புஷ்கர விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சென்னை எஸ். மகாலெட்சுமி பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது, ஆன்மிகப் பற்றாளர் சென்னை வளசரவாக்கம் ஜெயராமன் உள்ளிட்ட விழாக் குழுவினர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com