மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம் விழா, மகாளய அமாவாசை வழிபாடுகளையொட்டி, நாகை மாவட்டத்துக்கு செப். 20-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழா நிகழ்ச்சியாக, மகாளய அமாவாசை நாளான செப். 20-ஆம் தேதி சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு (தேர்வுக்கு இடையூறு இல்லாமல்) செப். 20-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை, செப். 28-ஆம் தேதியை (சனிக்கிழமை) பணி நாளாகக் கொண்டு ஈடு செய்யப்படும்.