நாட்டுமடம் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி விழா

வேதாரண்யம் ஸ்ரீ நாட்டுமடம் மாரியம்மன் கோயில் புரட்டாசிப் பெருவிழா காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

வேதாரண்யம் ஸ்ரீ நாட்டுமடம் மாரியம்மன் கோயில் புரட்டாசிப் பெருவிழா காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.
புரட்டாசித் திருவிழாவையொட்டி, வேதாரண்யேசுவரர் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, நாட்டுமடம் மாரியம்மன் கோயிலுக்கு புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு காப்புக் கட்டும் விழா நடைபெற்றது. அம்மன் வீதியுலாவுடன் தொடங்கிய புரட்டாசி பெருவிழா செப். 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஜி.கே. அறக்கட்டளையினர் உள்ளிட்ட உபயதாரர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com