மின்வாரியத்தில் சிறப்பாக பணியாற்றிய இருவருக்கு விருது

மன்னார்குடி மின் பொறியாளர் சங்கத்தின், ஜேசிஐ பவர் அமைப்பு வார விழா நிறைவு நாளில் மின் பொறியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

மன்னார்குடி மின் பொறியாளர் சங்கத்தின், ஜேசிஐ பவர் அமைப்பு வார விழா நிறைவு நாளில் மின் பொறியாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, அமைப்பின் தலைவர் வி. காந்திலெனின் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஜேசிஐ அமைப்பின் தேசிய தன்னம்பிக்கை பயிற்சியாளர் சா. சம்பத் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், கடந்த 2016-ஆம் ஆண்டில் மின்சாரவாரியத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, திருவாரூர் மேற்பார்வை பொறியாளர் வ. சந்திரசேகரன், மன்னார்குடி செயற்பொறியாளர் கி. ராதிகா ஆகியோருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதை, மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத் தலைவர் எஸ். கோவிந்தராஜன் வழங்கினார். இதில் திட்ட இயக்குநர்கள் ச. இளங்கோவன், கோ. ஜெயபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு, தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com