செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு ஆஞ்சநேயர்கள் அருள்பாலிக்கின்றனர். இதனால், இங்கு வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.