சீர்காழி கழுமலயம்மன் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட கழுமலயம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமுண்டீஸ்வரி, வைஸ்ணவி, வராஹி, இந்திராணி, கெளமாரி, பிரம்மஹி, மாகேஸ்வரி ஆகிய ஏழு அம்மன்கள் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் வருடாந்திர 10 நாள் பிரம்மோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று காலை, இரவு என இரு வேளை வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வீதியெங்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.