நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் என, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசுடன் (ஐஎன்டியுசி) இணைவுப் பெற்ற தமிழ்நாடு  சிவில் சப்ளைஸ்  கார்ப்பரேஷன் பணியாளர் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம்,  மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்க மாநிலத் தலைவர் சி. பழனி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி. பன்னீர்செல்வம்  முன்னிலை வகித்தார், மாநிலப் பொதுச் செயலாளர் கா. இளவரி, மாநிலச் செயல் தலைவர் பி. கதிர்வேல், ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலாளர் டி. வில்சன், மயிலாடுதுறை அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் பண்ணை டி. சொக்கலிங்கம், காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் ராம. சிதம்பரம் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
தீர்மானங்கள்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பருவக் காலத்தில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கி, தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். பணி ஓய்வின்போது கடைசி மாதத்தில் பெறும் ஊதியத் தொகையில் 50 விழுக்காடு  மாத ஓய்வூதியமாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கே. கமலநாதன், ஆர்.கே. கனகசபை, சங்க மாநில அமைப்புச் செயலாளர்கள் ஜெயபால், மணிமாறன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாகை மண்டலச் செயலாளர் கே. சுந்தரமூர்த்தி வரவேற்றார். மாநில அமைப்புச் செயலாளர் டி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com