மயிலாடுதுறை அருகேயுள்ள மேலையூர், கருவாழக்கரை அழகுஜோதி அகாதெமி சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
விக்டோரியா கிரிக்கெட் கிளப் மற்றும் அழகுஜோதி அகாதெமி பள்ளி நிர்வாகம் சார்பில் ஏப்.11, 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14 அணிகள் பங்கேற்றன.
இதில் வெற்றி பெற்ற விக்டோரியா கிரிக்கெட் கிளப் அணியினருக்கு, மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவச் செயலாளர்கள் இ. இளங்கோவன் (திருச்சி), வி. பசுபதி (திருவாரூர்), நெறியாளர் எஸ்.ஏ. முத்துக்குமாரராஜா ( நாகை) ஆகியோர் பரிசுகள் வழங்கி, பாராட்டுத் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைவர் ஏ. கண்ணன், தாளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.