இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், திருக்கடையூர் சன்னிதித் தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு

நாகை மாவட்டம், திருக்கடையூர் சன்னிதித் தெருவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், நாகை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நாகை வட்டச் செயலாளர் குணசேகரன், சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, இறந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்தினர். 
அத்துடன் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும், குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், வட்டப் பொருளாளர் சாமிதுரை, மாணவர் சங்க நிர்வாகி அய்யப்பன், அமுல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com