சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கோ பூஜை வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தமிழ் மாதப் பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தமிழ் மாதப் பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கொடிமரத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷே- ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மற்றும் கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் பசு, கன்றின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து வலம் வந்தும், மலர் தூவியும் வழிபட்டனர்.
 இதேபோல், ஆவணி மாதப் பிறப்பையொட்டி அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பிரம்ம தீர்த்தக் குளத்துக்கு எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு மஞ்சள்,திரவியப் பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com