பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட தவாக வலியுறுத்தல்

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சீர்காழியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் மோகன், நகர பொருளாளர் சம்மந்தம், கொள்ளிடம் ஒன்றியத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்கள்: சீர்காழி பகுதியில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும், சீர்காழி நகர் பகுதியில் புதிதாக அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும், வேளாண்மை அலுவலகத்தில் தட்டுப்பாடின்றி விதைநெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com