திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டி, ஒப்பித்தல் போட்டிகளில் முதல் மற்றும் நான்காம் இடங்களை சீர்காழி பள்ளி மாணவர்கள் பெற்றனர்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய சொற்பொழிவின் 125-ஆவது ஆண்டை நினைவுகூரும் பொருட்டு, சென்னை ராமகிருஷ்ணா மடம் சார்பில், திருச்சியில் பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.
இதில், பேச்சுப் போட்டியில் நாகை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர் குணாளன் முதலிடமும், அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் தருண்குமார் ஒப்பித்தல் போட்டியில் 4-ஆம் இடமும் பிடித்தனர்.
கோவையில் வரும் செம்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டு, சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கெüரவிக்கின்றனர்.
மேலும், இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்த இருக்கிறார்.