விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க நாகை மாவட்ட 27-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. 

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க நாகை மாவட்ட 27-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. 
நாகையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சங்கத்தின் நிர்வாகிகள் வி. பழனிசாமி, வி.கே. முருகையன், எஸ். மல்லிகா ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் என். பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். செல்வராசு, கட்சியின் மாவட்டச் செயலாளர் அ. சீனிவாசன் ஆகியோர் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னெடுக்கப்படும் பணிகளை விளக்கிப் பேசினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு... இந்த மாநாட்டில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவராக வி. ராமலிங்கம், மாவட்டச் செயலாளராக இரெ. இடும்பையன், மாவட்டப் பொருளாளராக வி.கே. முருகையன் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com