திருக்கடையூர் அமிர்தசாய் கோயிலில் சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தசாய் கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தசாய் கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமிர்தசாய் சாய்பாபா கோயில் நிறுவப்பட்டு, பிரதிஷ்டை நடைபெற்றது. தொடர்ந்து, தினந்தோறும் மண்டல அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகின்றன. 
இந்நிலையில், 48-ஆவது மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு பன்னீர், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் பழங்கள், இனிப்பு வகைகளைக் கொண்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com