சட்டைநாதர் கோயிலில் கோ பூஜை 

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு தமிழ் மாத பிறப்பையொட்டி கோ பூஜை நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் உள்ள கொடிமரத்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து, கோசாலையில் உள்ள பசு மற்றும் கன்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் பசுவுக்கு பழங்கள், அகத்திகீரை கொடுத்து வலம் வந்து வழிபட்டனர். கோயில் கண்காணிப்பாளர் தியாகராஜன் மற்றும் கோ பூஜை வழிபாட்டுக் குழுவினர் பங்கேற்றனர்.
அஸ்திரத்தேவருக்கு தீர்த்த வாரி: சீர்காழி சட்டைநாதர் கோயில் பிரம்மதீர்த்தக்குளத்தில் அஸ்திரத்தேவருக்கு தீர்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாசி மாத பிறப்பையொட்டி, அஸ்திரத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. 
முன்னதாக மேள, தாளங்கள் முழங்க அஸ்திரத்தேவர் பிரம்மதீர்த்தக்குளத்துக்கு எழுந்தருளினார். தீர்த்தக்குளத்தில் அஸ்திரத்தேவருக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம்
செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com