திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த சுமார் 100 பேர் நாம் தமிழர் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தனர்.
திருவெண்காடு பகுதியில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 100 பேர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி கட்சியின் மண்டலச் செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செம்பை சீலன்
வரவேற்றார். நிகழ்ச்சியில், உலக தமிழர் ஒற்றுமை குழும ஒருங்கிணைப்பாளரும், சமூக ஆர்வலருமான துரைகோபி தலைமையில் 100 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். அவர்களை மண்டலச் செயலாளர் கலியபெருமாள் சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் குமார், காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இணைச்செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.