செம்பனார்கோவில் அருகேயுள்ள பரசலூரில் புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் அண்மையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
பரசலூர் ஊராட்சியில் மாநில நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் சுமார் ரூ. 11லட்சம் செலவில் சுகாதார நிலையம் கட்டப்பட்டு, நீண்ட நாள்களாக பயன்பாட்டுக்கு வராமலிருந்தது. இதுகுறித்து முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், வீரபாண்டிய கட்டபொம்மன் பொதுநல மன்றத் தலைவருமான மாயாவெங்கடேசன், நாகை மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் வியாழக்கிழமை இக்கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
தற்போது, இங்கு 2 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், மாயாவெங்கடேசன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.