சீர்காழி அருகேயுள்ள செம்மங்குடி கிராமத்தில் கண்காணிப்புக் கேமராவுடன் கூடிய பேருந்து பயணிகள் நிழற்கூரை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில் மின்விளக்கு வசதிகள், செல்லிடப்பேசிக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வசதி, கண்காணிப்புக் கேமரா ஆகிய வசதிகளுடன் பயணிகள் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா அதிமுக ஒன்றியச் செயலர் ராஜமாணிக்கம் தலைமை நடைபெற்றது. புதிய பயணிகள் நிழற்கூரையை எம்எல்ஏ பி.வி. பாரதி திறந்து வைத்தார். இதில், கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் நக்கீரன், மாவட்ட முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.