நாகை மாவட்டம், பூம்புகாரில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சியினர் புதன்கிழமை கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் பார்த்திபன் தலைமை வகித்தார். மகளிரணி மாவட்டச் செயலர் பாமா முன்னிலை வகித்தார். இந்நிலையில், காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்ணகி சிலைக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயலர் சுவாமிநாதன் கலந்துகொண்டு, கண்ணகி சிலைக்கு அபிஷேக, ஆராதனை செய்தார்.
இதில் ஒன்றியத் தலைவர்கள் சொக்கலிங்கம், ஜோதிப்பிள்ளை, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.