குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலில் சிவராத்திரியையொட்டி, அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் முதலாமாண்டு சோழீஸ்வரா நாட்டியாஞ்சலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அபிநயா நாட்டியப்பள்ளி இயக்குநர் கல்யாண்குமார் தலைமை வகித்தார். பரத நாட்டிய கலைஞர் கே. உமாமகேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் 30 மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பங்கேற்ற மாணவியர் அனைவருக்கும் அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.