திருக்கடையூர் அருய்ஞானத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழைமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி, நான்கு கால பூஜைகளான காலை சந்தி, உச்சி காலம், சாயரச்சை, அர்த்தசாம பூஜைகள் நடைபெற்றன.
மஞ்சள் திரவியம், மாபொடி, இளநீர், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.