மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறையில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடியில் உள்ள தமிழ்நாடு  மின்சார வாரியம்,  இயக்குதல் பராமரித்தல் செயற்பொறியாளர் அலுவலகத்தில்  நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் (நாகை) சாமுவேல் ராஜசேகர் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் வை. முத்துக்குமரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மின் நுகர்வோர்கள் விடுத்த கோரிக்கைகள் அதிகாரிகள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மின் நுகர்வோர்கள் புதிய மின் மாற்றி அமைப்பது, கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் புதிய மின் இணைப்புப் பெறுதல், மின் இணைப்புப் பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதில், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர்கள் ஆர். கார்த்திகேயன், டி. கலியபெருமாள், ஜி. பிரபாகரன், உதவிப் பொறியாளர்கள் ஆர். ராஜேந்திரன், கங்குலி, ரகு, லெட்சுமி நாராயணன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com