குத்தாலம் பேரூராட்சியில் 4,540 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் விழாவையொட்டி, இலவச வேட்டி, சேலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கிராம நிர்வாக அலுவலர் ராதாலட்சுமி தலைமை வகித்தார். இதில், பேரூராட்சி முன்னாள் தலைவர் எம்.சி. பாலு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 4,540 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க இயக்குநர்கள் என். ரெத்தினம், ஜெயபாலகிருஷ்ணன், மணி. சுந்தர், ராஜேந்திரன், சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.