கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி,  நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி,  நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் த. ஆனந்த் தலைமை வகித்தார். 
மும்மத்தவரும் பங்கேற்கும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில்,  வேளாங்கண்ணி தியான இல்ல அதிபர் ஜான்சன்ஹெட்வர்க், சிறுபான்மை ஆணைய நல வாரியத் தலைவர் ஏ. சையது காமில் சாகிப், தணிக்கையாளர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். 30-க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கலிடப்பட்டது.  கல்வி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
சின்மயா பள்ளியில்...
நாகை சின்மயா பள்ளியில், பள்ளியின் ஆச்சாரியார் சுவாமிஜி ராமகிருஷ்ணானந்தா மேற்பார்வையில் நடைபெற்ற விழாவுக்குப் பள்ளி முதல்வர் கீதா பெனட் தலைமை வகித்தார். தாளாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்  கலந்துகொண்டனர்.
முட்டம் பள்ளியில்...
நாகை, முட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவுக்கு கல்விக் குழுத் தலைவர் பி.டி. பகு தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ராமலிங்கம், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com