கூட்டுறவு வங்கிக்கு ரூ. 24 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி ஆய்வு
சீர்காழியை அடுத்த செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு ரூ. 24 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணியை வெள்ளிக்கிழமை வங்கித் தலைவர் ஆய்வு செய்தார்.
செம்மங்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நவீன லாக்கர் வசதி கொண்ட கான்கிரீட் கட்டடத்துடன் புதிய கட்டடம் கட்ட ரூ. 24 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜமாணிக்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை தரமாக கட்டுவதுடன் விரைந்து முடித்திடவும் ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் சரவணகோபால், கள அலுவலர் ராமலிங்கம், கூட்டுறவு வங்கி செயலர் மருதுபாண்டியன், நிம்மேலி கூட்டுறவு வங்கி எழுத்தர் சக்தி, கூட்டுறவு வங்கி விற்பனையாளர்கள் ரவி, சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.