குத்தாலம் அருகே மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருவாலங்காட்டை அடுத்த மாம்புள்ளி கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்துவின் மகன் ராமலிங்கம் (31). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் குத்தாலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், வியாழக்கிழமை திருவாலங்காடு கடைவீதியில் உள்ள கடைகளில் ராமலிங்கம், அரிவாளுடன் சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா, உதவி ஆய்வாளர் அம்புரோஸ் ஆகியோர் வழக்குப் பதிந்து, ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.